பாபா ஆம்தேவின் பேத்தி தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை

பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராகக் கருதப்படும் டாக்டர் சீதள் ஆம்தே - கராஜ்கி தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் இன்று காலை அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது.இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர் இன்று காலை, தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக வரோரா போலீஸ் அதிகாரி பி. பென்டார்கர் தெரிவித்துள்ளார்.

அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும், அடுத்தகட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பென்டார்கர் தெரிவித்துள்ளார்.

மகசேசே விருது பெற்ற பாபா ஆம்தேவின் பேத்தியான மருத்துவர் சீதள் ஆம்தே - கராஜ்கி தொழுநோயாளிகளுக்காக பணியாற்றி வரும் மகாரோகி சேவா சமிதியின் தலைமைச் செயல் அலுவலராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் அதுவும் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் காரணம் என்ன என்பது குறித்துத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You'r reading பாபா ஆம்தேவின் பேத்தி தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிக் பாஸ் வெளியேற்றத்திற்கு பிறகு டம்மி மம்மி சம்யுக்தாவின் நிலை! வைரலாகும் புகைப்படங்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்