ஓயாத சர்ச்சை... கனடா தூதருக்கு சம்மன் விடுத்த இந்தியா!

இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த 10 நாட்களாக டெல்லி மாநகரத்தை முற்றுகையிட்டுள்ளனர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். ``இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வருகின்றன. இந்த செய்தி கவலை கொள்ள செய்கிறது. எங்களின் கவலைகளை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம். அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க எப்போதும் கனடா துணை நிற்கும்" என்று கூறியிருந்தார்.

இவருக்கு பதில் கொடுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ``விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களில் இதுபோன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றவை" எனக் கூறினார். இத்துடன் இந்த விவகாரம் ஓய்ந்துவிட்டதாக நினைத்த நிலையில் இன்னும் ஓயாமல் புகைந்துகொண்டிருக்கிறது.

ட்ரூடோவின் கருத்தைக் கண்டிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை சார்பில், கனடா நாட்டுத் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, கனட தூதர் நதிர் படேலை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்தால் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் எனவும் வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

You'r reading ஓயாத சர்ச்சை... கனடா தூதருக்கு சம்மன் விடுத்த இந்தியா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிக் பாஸில் பஞ்சாயத்து.. தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட பயில்வான்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்