பிரதமரின் அலுவலகத்தை ஓஎல்எக்ஸ் மூலம் விற்க முயற்சி : 4 பேர் கைது

வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தை ஏலத்தில் விற்பனை செய்வதாக இணையதளத்தின் மூலம் அறிவிப்பு வெளியிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தைப் போட்டோ எடுத்து, அதை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓஎல்எக்ஸ் இணையதளத்தில், 7கோடியே, 50லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என, விளம்பரம் வந்திருந்தது இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரதமரின் அலுவலகத்தைப் புகைப்படம் எடுத்த நபர் உள்பட 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

விளம்பரத்தைப் பதிவிட்ட நபரின் அடையாளத்தைக் கொண்டு, நடத்தப்பட்ட விசாரணையில், தவறான ஐடிமுகவரி கொடுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக லட்சுமி காந்த் ஓஹா, அமித்குமார் பதக், உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என வாரணாசி எஸ்எஸ்பி தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே ஓஎல்எக்ஸ் நிறுவனம் அந்த விளம்பரத்தைத் தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம், குஜராத் மாநிலத்தில், நர்மதை நதிக்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான 597 அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையாக்கச் சிறப்பு மருத்துவமனைகள் கட்டவும், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும், சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இந்த சிலை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஒஎல்எக்ஸ் வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading பிரதமரின் அலுவலகத்தை ஓஎல்எக்ஸ் மூலம் விற்க முயற்சி : 4 பேர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலக்காடு நகரசபை அலுவலகத்தில் ஜெய்ஸ்ரீராம் பேனர் பதிலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசிய கொடியுடன் போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்