தத்தெடுத்த மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றுவேன்... நடிகை ரோஜா உறுதி!

தத்தெடுத்த மாணவியின் டாக்டர் கனவையும் நிறைவேற்றுவேன் என நடிகையும், எம்.எல்.ஏவுமான ரோஜா உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பச்சிகப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி புஷ்பகுமாரி என்பவர் ஆதவற்ற நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சிகப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பகுமாரி. ஆதரவற்ற மாணவியான அவர் திருப்பதியில் உள்ள பெண் குழந்தைகள் நல மையத்தில் தங்கி மேல்நிலைப்பள்ளிக் கல்வியை நிறைவு செய்துள்ளார்.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் நீட் தேர்விலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இருப்பினும், பொருளாதார சூழ்நிலை காரணமாக மருத்துவ கல்லூரியில் சேர உதவி கிடைக்காமல் தவித்து வந்த மாணவிக்கு தற்போது ரோஜா உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாப்பட்டது.

முதல்வர் பிறந்தநாளில் நாம் எதேனும் நல்ல காரியம் செய்ய வேண்டும் என் நோக்கில், ஆதவற்ற மாணவி புஷ்பகுமாரியை ரோஜா தத்தெடுத்துள்ளார். மேலும், மாணவியின் டாக்டர் படிப்பிற்கு தேவையான மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகவும், மாணவியின் மருத்துவ லட்சிய கனவையும் நிறைவேற்றுவதாகவும் உறுதி ஏற்றுள்ளார்.

You'r reading தத்தெடுத்த மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றுவேன்... நடிகை ரோஜா உறுதி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காரில் போரின்போது நாட்டை வாஜ்பாய் எப்படி பாதுகாத்தார்?!... ரகசியங்களை சொல்லும் புத்தகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்