நீல நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலையால் பரபரப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், நீல நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் படாவுன் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுபோன்று பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, படாவுன் நகரித்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை மாவட்ட நிர்வாகம் சீரமைத்தது.

அம்பேத்கர் சிலை என்றாலே நீல நிறத்தில் தான் பெரும்பாலும் இருக்கும். இந்நிலையில், ஏற்கனவே நீல நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு தற்போது காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, போலீஸ் ஸ்டேஷன், அம்மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்டவைக்கு காவி நிற பெயின்ட் அடித்த நிலையில் தற்போது, அம்பேத்கர் சிலைக்கும் காவி நிறம் பெயின்ட் அடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நீல நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலையால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐபிஎல் டிக்கெட்டுகளை கிழித்தெறியுங்கள்: பாரதிராஜா ஆவேசம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்