கடைக்கு மளிகை பொருள் வாங்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமக்வெறியன்..!

14 வயது சிறுமி, கடைக்கு சென்று மளிகை பொருள் வாங்கிய பொழுது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜமானியா கிராமத்தை சார்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். சிறுமியின் தாய் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று சில மளிகை பொருள்களை வாங்கி வர சொல்லியுள்ளார். இதனால் சிறுமி மதியம் 1.00 மணியளவில் கடைக்கு சென்றுள்ளார்.

கடைக்கு பொருள்களை வாங்க சென்ற சிறுமி நெடுந்நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ஒரு ஒரு பக்கமாக சென்று சிறுமியை தேட தொடங்கியுள்ளனர். கடை உரிமையாளரின் மனைவியை விசாரித்த பொழுது சிறுமி இந்த பக்கம் வரவில்லை என்று கூறியுள்ளார். எங்கே தேடியும் சிறுமி கிடைக்காததால் போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டது. சிறுமி கடைசியில் கடைக்கு சென்றதால் கடை உரிமையாளரின் வீட்டில் தேடப்பட்டது.

அப்பொழுது வீட்டின் கூரை மேல் சிறுமி சடலமாக இருந்துள்ளார். போலீஸ் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் முகத்தில் நக கீறல், ஆடை கிழிந்தும் முடி கலைந்தும் இருந்துள்ளது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ரிப்போர்ட் வந்துள்ளது. இதையடுத்து கடை உரிமையாளர், அவரது மனைவி இருவரும் தலைமறைவு ஆகிவிட்டனர்.போலீஸ் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You'r reading கடைக்கு மளிகை பொருள் வாங்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமக்வெறியன்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இங்கிலாந்தின் 'ஆணி வேரான' ஜோ ரூட் 100வது டெஸ்டில் சதம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்