சித்தூர் அருகே கோர விபத்து: 14 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியிலிருந்து அஜ்மீருக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெல்லூர்த்தி மண்டலத்திலுள்ள மாதாபுரம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள ஹஜ்மீருக்கு டெம்போ ஒன்றில் பயணம். மதனப்பள்ளியை சேர்ந்த 18 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த வேன் கர்னூல் மாவட்டம் மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேன் உருத்தெரியாமல் நொறுங்கியது. வேனில் பயணம் செய்தவர்களில் 8 ஆண்கள், ஒரு குழந்தை ,ஐந்து பெண்கள் என 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று இரு வாகனங்களுக்கு இடையே சிக்கி மரணம் அடைந்தவர்களின் உடல்களை கிரேன் உதவியுடன் மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்துகின்றனர்.

You'r reading சித்தூர் அருகே கோர விபத்து: 14 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் பட ரிலீஸ் தேதி.. சிறப்பு பார்வை வெளியீடு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்