சத்யேந்திர ஜெயினை தொடர்ந்து மணீஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயினை தொடர்ந்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் கவர்னர் அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றவாறே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நேற்று அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை தொடர்ந்து, இன்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவரை உடனடியாக லோக் நாயக் ஜெய் நாராயண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இங்கு, மணீஷ் சிசோடியாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You'r reading சத்யேந்திர ஜெயினை தொடர்ந்து மணீஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவில் ஈபி-2 பெற்றுள்ளீரா? 151 ஆண்டுகளில் கிரீன்கார்டு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்