200 பேருக்கு மேல் விசாரணை- சூடுபிடிக்கும் டெல்லி தற்கொலை விவகாரம்

டெல்லியின் புராரி பகுதியில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட பிரேத பரிசோதனை, ’11 பேரும் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்துள்ளனர்’ என்று தெரிவித்தாலும், இறுதி பிரேத பரிசோதனைக்காக போலீஸ் காத்திருக்கிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 200 பேரிடம் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது.

குறிப்பாக, இறந்தவர்களில் ஒருவரான 33 வயது பிரியங்கா பாட்டியாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் போலீஸ் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது.

பாட்டியா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘முக்தியடையும்’ நோக்கில் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. போலீஸ், இந்த விவகாரம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

ஆனால், பிரேத பரிசோதனையில் அனைவரும் தற்கொலை செய்து கொண்டுது உறுதி செய்யப்பட்டது. இறுதிக்கட்ட பிரேத பரிசோதனைக்காக போலீஸ் காத்திருக்கும் நிலையில் தற்போது ஏறக்குறைய 200 பேரிடம் இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தகது.

You'r reading 200 பேருக்கு மேல் விசாரணை- சூடுபிடிக்கும் டெல்லி தற்கொலை விவகாரம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹாசினி கொலை வழக்கு: தஸ்வந்த்துக்கு தூக்கு தண்டனை உறுதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்