உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கைவிடுதுள்ளதை அடுத்து, அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்டு 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, டெல்லியில் பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், விழாவின்போது டெல்லியில் மிகப்பெரிய தாக்குதல் நடைபெறக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதற்காக, பாகிஸ்தாஸ் தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதைமுன்னிட்டு, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உள்பட டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

You'r reading உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் எதிரொலி: 82 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்