தொடர் உண்ணாவிரதம் எதிரொலி: ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் அனுமதி

குஜராத்தில் 13 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இவரது போராட்டம் நேற்றுடன் 13வது நாளாக உண்ணாவிரதம் நீடித்ததை அடுத்து, ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மிகவும் சோமடைந்தது. இதனால், ஹர்திக் பட்டேலை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து, அம்மாநில அரசு ஹர்திக் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading தொடர் உண்ணாவிரதம் எதிரொலி: ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பீகாரில் பரபரப்பு: மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்