100 ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது குஜராத்தில்!

குஜராத்தில் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் கடனாவில் உள்ள நானி தேனாவத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் ராஜேஷ்குமார் படேல். இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தையிடம் ரூ 100 லஞ்சமாகப் பெற்றபோது பிடிப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ரூ.500 லஞ்சம் வாங்கிய இவர் மீண்டும் அந்தப் மாணவியின் தந்தையிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார். இந்த முறை மாணவியின் தந்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.

இதன் பேரில் நானி தேனாவத் 100 ரூபாயை லஞ்சமாக வாங்கும்போது மறைந்திருந்து கவனித்த போலீசார் தேனாவத்தை கையும் களவுமாக கைது செய்தனர்.

You'r reading 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது குஜராத்தில்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரியல் ரிவால்வர் ராணியாகும் டாப்ஸி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்