உத்தரகாண்டில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று மாலை 4.47 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால், அச்சம் அடைந்த மக்கள் வீதிக்கு ஓடி வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

You'r reading உத்தரகாண்டில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி திடீர் போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்