மத்தியப்பிரதேசத்தில் முன்னாள்பாஜக தலைவரின் அராஜகம்!

மத்தியப்பிரதேச மாநில பாஜக முன்னாள் தலைவரும் எம்.பியுமான நந்தகுமார் சுங்கச் சாவடி ஊழியரை தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள மத்தியப்பிரதேசத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் பிரச்சார வருகைக்கான முன்னேற்பாடுகளை நந்தகுமார் சிங் சவுகான் செய்து வருகிறார். குணா-சிவ்புரி சாலையில் உள்ள சுங்கச் சாவடியைக் கடக்கும் போது, சலுகைக்காக காண்பிக்க வேண்டிய அடையாள அட்டையை சுங்கச்சாவடி ஊழியர் கோரியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கும் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அவர் மீது பாஜக கட்சி நடவடிக்கை எடுக்குமா என்று மக்கள் எதிர்பார்துவருகிறார்கள்.

You'r reading மத்தியப்பிரதேசத்தில் முன்னாள்பாஜக தலைவரின் அராஜகம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கவும்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்