பணியில் பாதுகாப்பில்லை ஐ.டி இன்ஜீனியர் தற்கொலை!

In IT there is no job security: 25-year-old techie commits suicide in Pune

வேலையில் சேர்ந்த மூன்றே நாட்களில் பணியில் பாதுகாப்பில்லை என்ற காரணத்திற்காக மென்பொருள் இன்ஜீனியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணா துர்காபிரசாத் ( வயது 25)சாஃர்ட்வேர் இன்ஜீனியரான இவர், டெல்லி, ஹைதரபாத் போன்ற நகரங்களில் புணி புரிந்து விட்டு சமீபத்தில் புனே நகரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்து மூன்று நாட்கள்தான் ஆகியிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை காலை, தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மணிக்கட்டை அறுத்துக் கொண்டு இறந்து கிடந்தார்.

அறையில் இருந்து கைப்பற்றப்பட்டக் கடிதத்தில்,. ''ஐ.டி துறையில் பணி பாதுகாப்பில்லை. என் குடும்பத்தாரரை நினைத்து நான் மிகவும் கவலையில் இருக்கிறேன் '' என்று கூறுப்பட்டிருந்தது. போலீசார் விசாரரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading பணியில் பாதுகாப்பில்லை ஐ.டி இன்ஜீனியர் தற்கொலை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஃபிக்ஸிங்- சந்தேகம் கிளப்பும் ரணதுங்கா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்