டெல்லி தலைமை செயலகத்தில் முதல்வர் கேஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்

Chilli Powders throws on Delhi CM Kejriwal

டெல்லி தலைமை செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு சவால்விடுத்து டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியவர் கேஜ்ரிவால். அதேநேரத்தில் டெல்லி அரசுக்கு மத்திய அரசு உதவி செய்யாமல் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லி தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் மதிய உணவுக்காக தமது அறைக்கு கேஜ்ரிவால் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் திடீரென கேஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்தினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அனில்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading டெல்லி தலைமை செயலகத்தில் முதல்வர் கேஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காமெடி என்ற பெயரில் மீம்ஸ் போடுகிறவர்களே.. இதை கொஞ்சம் படிங்க..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்