மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கன்னத்தில் பளார்விட்ட மர்ம நபர் கைது

A youth arrested for slapping Union Minister Ramdas Athawale

மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கன்னத்தில் பளார் என அறைந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் அம்பெர்நாத் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும் குடியரசு கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே பங்கேற்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அத்வாலே கன்னத்தில் அறைந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்வாலே ஆதரவாளர்கள் அந்த மர்ம நபரை பிடித்து உதைத்தனர். பின்னர் போலீசார் அந்நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

மத்திய அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அமைச்சருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

You'r reading மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கன்னத்தில் பளார்விட்ட மர்ம நபர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 18-ல் திமுகவுக்கு வெற்றி- வைகோ பேச்சால் மீண்டும் சலசலப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்