தமிழகதில் தெடந்து அவமதிக்கப்படும் பெரியார்?

சுயமரியாதை வேண்டாம் என்பவர்கள் செருப்பை பெரியார் மீது வீசி செல்கிறார்கள்

சுயமரியாதை வேண்டுபவன் செருப்பை அனிந்து கொள்கிறான்
சுயமரியாதை வேண்டாம் என்பவர்கள் செருப்பை பெரியார் மீது வீசி செல்கிறார்கள் .

சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இரு தினங்கள் முன்பாக பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக பிரமுகர் முத்துராமன் சிக்கினார். இதேபோல, சென்னையில் பெரியார் சிலை மீது செருப்பை வீசிய பாஜக வக்கீல் ஜெகதீஷனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிடித்து அடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

இதுபோன்ற அவமதிப்பு சம்பவங்களுக்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவராப்பட்டு என்ற இடத்தில் உள்ள பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இன்று காலை பொதுமக்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும், திராவிடர் கழக தொண்டர்கள் போராட்டம் நடத்த அங்கு குவியத் தொடங்கினர். இதையடுத்து போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சிலையை அவமதித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

You'r reading தமிழகதில் தெடந்து அவமதிக்கப்படும் பெரியார்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்ட்ராபெரி சாப்பிடும் மக்களே உஷார்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்