ஆசிரியரயை பாலியல் தொல்லை செய்த பத்திரிக்கையாளர்கள் கைது!

திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியரயை பாலியல் ரீதியாக தொல்லை செய்த இரண்டு பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜா என்பவர் திருமங்கலத்தை சேர்ந்த கல்லூரி ஆசிரியையுடன் முகநூலில் நண்பராகி உள்ளார். ராஜா திருமணமான போதிலும் அதை மறைத்து அவர் கல்லூரி ஆசிரியையிடம் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியை தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், அவருடன் பேசுவதை ராஜா நிறுத்திவிட்டார்.

இதையடுத்து ராஜா அவர் நண்பர் ஸ்டாலினிடம்நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையறிந்த ஸ்டாலின் முகநூலில் அந்த ஆசிரியிடம் பேசி மிரட்டியுள்ளார். ராஜவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஸ்டாலின் ஆசிரியையிடம் இருந்துரூ. 1 லட்சம் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அந்த கல்லூரி ஆசிரியை காவல்துறையிடம்புகார் அளித்துள்ளர. இந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியா நவநாகரீக நாடாக மாறி வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மட்டும் குறைந்தபாடில்லை. பிறந்த குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் பாலியல்ரீதியான வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

You'r reading ஆசிரியரயை பாலியல் தொல்லை செய்த பத்திரிக்கையாளர்கள் கைது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வாங்கிய குஜராத் தொழிலதிபர் மாயம்..?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்