எம்.பி எம்.எல்.ஏக்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி?

காவல்துறையை தவறாக பேசும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என ஆந்திரா கதிரியை சேர்ந்த காவல் மேற்பார்வையாளர் மாதவ் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள தடிபத்ரி என்ற இடத்தில் இருபிரிவினரிடையே சண்டை ஏற்பட்டது. குறைந்தளவிலான காவலர்களே இருந்ததால் சண்டையை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலுங்கு தேச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திவாகர் ரெட்டி, காவல்துறையினர் கலவரத்தை அடக்காமல், பயந்து ஓடி ஒளிந்து கொண்டதாக தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சு அம்மாநில காவல்துறையில் சலசலைப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இன்ஸ்பெக்டர் மாதவ், காவல்துறையினர் பொறுமைக்கு எல்லையுண்டு. இனிமேல் எம்.பி, எம்.எல்.ஏ தப்பாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவேன் என ஆவேசமாக தெரிவித்தார். அந்த காவல் மேற்பார்வையாளரை இளைஞர்கள் "ஏன் சார் அப்படியே கொஞ்சம் தமிழ் நாட்டு பக்கம் வந்துட்டு போங்க என்று இணையதளதில் பதிவேற்றி வருகிறார்கள்" சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில்  ஹெச்.ராஜா காவல்துறையை தவறாக பேசியது குறிப்பிடதக்கது.

You'r reading எம்.பி எம்.எல்.ஏக்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உணவு எப்படி சாப்பிட்டால் நல்லது தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்