நிரவ் மோடியின் இந்திய சொத்துகள் முடக்கம்!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடியின் இந்திய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

குஜராத் வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடி அளவில் மோசடி செய்துவிட்டு, இந்தியாவை விட்டு தப்பியோடியவர். அவரது வீடு மற்றும் நிறுவனங்களில், சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புக்கள் அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தன.

முன்னதாக வங்கி மோசடி தொடர்பாக ஜனவரி 31ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் விடுத்தது. ஆனால் நீரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டைவிட்டு ஜனவரி மாத துவக்கத்திலேயே வெளிநாட்டுக்குத் தப்பினர்.

இந்நிலையில், இன்று நிரவ் மோடிக்கு சொந்தமான காற்றாலை மின் உற்பத்தி பண்னை முடக்கப்பட்டது. மேலும், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ரூ.52.8 கோடி மதிப்புள்ள 9.6 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி பண்னையையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நிரவ் மோடியின் இந்திய சொத்துகள் முடக்கம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!- ரஜினி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்