பேரணியில் மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம்- மு.க அழகிரி

மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம்- மு.க அழகிரி

செப்டம்பர் 5-ஆம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் மக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என மு.க அழகிரி ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வருகிற 5-ஆம் தேதி சென்னையில், திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் மதுரையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து மு.க.அழகிரி கூறுகையில், “வரும் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணாசிலை அருகில் பேரணி தொடங்கி கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும். அமைதி பேரணியில் பங்கேற்கும் தொண்டர்கள் ஆரவாரம், ஆர்பாட்டத்திற்கு இடம் தராமல் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், பேரணியின்போது தொண்டர்கள் அனைவரும் போலீசாருக்கும் மக்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading பேரணியில் மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம்- மு.க அழகிரி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிளஸ்-2 படித்து விட்டு சிகிச்சை அளித்த போலி டாக்டர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்