கஜா புயலால் சோத்துக்கு வழி இல்லாமல் அலைந்த மக்கள்... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Onemore Controversial speech of Minsiter Dindigul Srinivasan

கஜா புயலால் சோத்துக்கு வழி இல்லாமல் அலைந்த மக்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கிண்டலடித்து பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:

கருணாநிதி சிலை திறப்பின்போது ராகுல்தான் வருங்கால பிரதமர் என்று ஸ்டாலின் முழங்கினார். ஆனால் மம்தா அழைத்த விழாவில் அவரால் அப்படிப் பேச முடியவில்லை. பா.ம.கவுக்கும் ம.தி.மு.க.வுக்கும் அங்கீகாரம் வழங்கியது ஜெயலலிதாதான்.

கஜா புயலால் மக்கள் சோற்றுக்கு வழி இல்லாமல் அலைந்தார்கள். இப்போது அவர்களுக்கு ரூ2,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. தினகரனுடன் போன 18 எம்.எல்.ஏ.-க்கள் இன்று ரோட்டில் பிச்சை எடுக்கின்றனர்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

You'r reading கஜா புயலால் சோத்துக்கு வழி இல்லாமல் அலைந்த மக்கள்... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்