மக்களவைத் தேர்தலுக்கு திமுக விலும் விருப்ப மனு அறிவிப்பு!

Dmk announces wish petition for Loksabha election

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு வரும் 25-ந் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுகவில் விருப்ப மனு பெறுவது கடந்த 15-ந் தேதியே முடிவடைந்து விட்டது. தேமுதிகவில் நாளை முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திமுகவிலும் நாளை மறுதினம் 25-ந் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ந் தேதி முதல் தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ரூ 25 ஆயிரம் எனவும், தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு விண்ணப்பித்தோருக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

You'r reading மக்களவைத் தேர்தலுக்கு திமுக விலும் விருப்ப மனு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக கூட்டணியில் மதிமுக எப்போதும் தொடரும் - வைகோ உறுதி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்