கூட்டணி குறித்து அதிமுக நல்ல முடிவு எடுக்கும்: டெல்லியில் இருந்து ஜி.கே.வாசன் நம்பிக்கை

GK Vasan confidents over AIADMK Alliance

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து அதிமுக நல்ல முடிவு எடுக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று கூறியுள்ளதாவது:

எங்களது இயக்கப்பணிக்கும், மக்கள் பணிக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பது குறித்த த.மா.கா.வின் நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறோம்.

அது சம்பந்தமாக அதிமுக தேர்தல்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சுமுகமான முறையில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.

இறுதி முடிவை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். ஒத்த கருத்து ஏற்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக கூட்டணி நிலையை அறிவிப்போம்.

தொகுதி ஒதுக்கீடு பற்றி எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளோம். எனவே, நல்ல முடிவை அ.தி.மு.க. எடுக்கும் என்று கருதுகிறேன்.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

You'r reading கூட்டணி குறித்து அதிமுக நல்ல முடிவு எடுக்கும்: டெல்லியில் இருந்து ஜி.கே.வாசன் நம்பிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரேமலதாவின் சர்ச்சைக்குரிய செய்தியாளர்கள் சந்திப்பு... மூத்த பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்