நோ இரட்டை இலை ...சைக்கிள் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டி: ஜி.கே.வாசன்

TMC not to contest in AIADMK symbol

அதிமுக கூட்டணியில் 1 தொகுதி கிடைத்துள்ள நிலையில் சைக்கிள் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அணியில் நீண்ட இழுபறிக்கு பின் இணைந்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அடம்பிடித்தார் வாசன்.

ஆனால் ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கி ஒப்பந்தத்தை உறுதி செய்தது அதிமுக. இந்த நிலையில் ஜி.கே.வாசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தேர்தல் ஆணையத்தில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்க மனு கொடுத்துள்ளோம். எங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

சைக்கிள் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தைப் பெற்று போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட யாரும் நிர்பந்திக்கவில்லை.

இக்கூட்டணி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு வாசன் பதிவிட்டுள்ளார்.

You'r reading நோ இரட்டை இலை ...சைக்கிள் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டி: ஜி.கே.வாசன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம் 9.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்