அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் திடீர் மோதல்

conflict between admk administrators in tiruvallur

பொன்னேரியில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒரே கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மோதிக்கொள்ளும் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தேர்தல் பணி தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றிய அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக நிர்வாகிகள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த ஒருவர் செல்போனில் அந்த காட்சிகளை பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டார். தற்போது அந்த வார்த்தை மோதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

You'r reading அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் திடீர் மோதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓட்டுப் போட போங்க.. தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்