வீட்டுல முடங்கிக் கிடக்காதீங்க! குஷ்பு ஆவேசப் பேட்டி!!

kushpu appealed voters to cast their vote

‘‘சும்மா, வாட்ஸ் அப்பில் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீங்க மக்களே...’’ என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு இன்று அதிகாலை ஏழு மணிக்கே வந்து வாக்களித்தார். அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களியுங்கள்.

எப்பவும் வாட்ஸ் அப், ட்விட்டர் என்று சமூக ஊடகங்களில் மட்டும் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீங்க. உங்கள் உரிமைகளை மீட்க வேண்டும் என்றால் முதலில் தவறாமல் வாக்களியுங்கள். இவ்வாறு குஷ்பு கூறினார்.

You'r reading வீட்டுல முடங்கிக் கிடக்காதீங்க! குஷ்பு ஆவேசப் பேட்டி!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தின் பல ஊர்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அவுட்! எதிர்க்கட்சிகள் சந்தேகம்!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்