விரலில் மை இருந்தால்.. ஓட்டலில் 50% தள்ளுபடி!

if you show your inked finger 50 % offer on food

விரலில் மை வைத்து வரும் வாக்காளர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்று அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 11 மணி நேர நிலவரப்படி 30 சதவீத வாக்குகள் தமிழகத்தில் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பல இடங்களில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பழுது மற்றும் பூத் ஸ்லிப் இல்லாத பிரச்னை என பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை வாக்களிக்க முடியாமல் திணறி வருகின்றனர். 20 நிமிடங்களுக்குள் வாக்கு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும், எங்கேயும் தேர்தல் நிற்கவில்லை எனவும் சத்ய பிரதா சாஹூ கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் விரலில் ‘மை’ யுடன் வரும் வாக்காளர்களுக்கு உணவில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கிளரியன் பிரசிடெண்ட் எனும் நட்சத்திர ஓட்டலில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விரலில் மையுடன் வரும் வாக்காளர்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரை உணவில் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

You'r reading விரலில் மை இருந்தால்.. ஓட்டலில் 50% தள்ளுபடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்