முடியாத உடம்புடன் வந்து வாக்களித்த விஜயகாந்த்.. பிரேமலதா மட்டுமே பேட்டி கொடுத்தார்!

Vijayakanth Cast his vote in Chennai with his family

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெருமளவில் பிரசாரம் செய்யவோ, பேசவோ விஜயகாந்தால் முடியவில்லை. ஆனால், இறுதிவரை கேப்டன் வருவார்.. கேப்டன் வருவார் என பிரேமலதா கொடுத்த வாக்குறுதிக்காக கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் சிறிது நேரம் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த விஜயகாந்த் தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் வந்த அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், இந்த தேர்தலில் அதிமுக, தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றார்.

You'r reading முடியாத உடம்புடன் வந்து வாக்களித்த விஜயகாந்த்.. பிரேமலதா மட்டுமே பேட்டி கொடுத்தார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விரலில் ‘மை’ இருந்தால்.. ஓட்டலில் 50% தள்ளுபடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்