மதுரை : அலுவலகம் திறந்து பிரச்சாரம் துவக்கியது பாஜக

தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் தேர்தல் அலுவலகத்தை துவங்கி பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டது பாஜக. 2021 சட்டமன்ற தேர்த ல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் எந்த கட்சியும் கூட்டணி குறித்தும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜகவினர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை அமர்க்களமாக திறந்து அதிமுக உள்பட அனைவரையும் அதிர வைத்திருக்கிறார்கள்.

அதோடு விடவில்லை பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் பேரணியாக சென்று தாமரைக்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் வேறு செய்ய ஆரம்பித்து விட்டனர். இப்போது புரிகிறதா ? நமது கட்சி பாஜகவின் பிடியில் தான் இருக்கிறது என்று அதிமுகவினரே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

You'r reading மதுரை : அலுவலகம் திறந்து பிரச்சாரம் துவக்கியது பாஜக Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கணினி பயிற்றுவிப்பாளர் தேர்வு, விசாரிக்க ஆணையம் அமைக்க பரிந்துரை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்