நிறைவடைந்த மராத்தியர்கள் போராட்டம்!

இடஒதுக்கீடு கோரி மராத்தியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இருக்கும் மராத்திய அமைப்புகள், தங்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மும்பையில் முழு அடைப்பு பந்துக்கு மராத்திய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பந்த் அழைப்பை அடுத்து, பல தனியார் பஸ் நிறுவனங்கள், இன்று அவர்களின் வாகனத்தை இயக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அவுரங்காபாத்தின் கிராமப்புற பகுதிகளில் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டது.

அதே நேரத்தில், மும்பையில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்தை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

You'r reading நிறைவடைந்த மராத்தியர்கள் போராட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுச்சேரி மாநில அந்தஸ்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்- கிரண் பேடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்