நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலைக்குள் இந்தியா வந்துவிடும் என தகவல்

துபாயில் மாரடைப்பில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலைக்குள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

துபாயில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல் துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலின் முக்கிய உறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதால் உடலை பெற்றுச் செல்ல தாமதம் ஆகி வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை தயாராகாத நிலையில் அவரது உடல் இன்று காலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், நாளை மதியம் 12 மணியளவில் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், பரிசோதனை அறிக்கை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை வந்துவிடும் என்றும், நாளை இறுதி சடங்கு நடைபெறும் எனவும் தற்போது கூறப்பட்டுள்ளது.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் மும்பைக்கு வந்தடைந்தார். மேலும், கமல் உள்பட திரையுலகினர் மும்பைக்கு இன்று புபுறப்பட்டுள்ளனர்.

You'r reading நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலைக்குள் இந்தியா வந்துவிடும் என தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீட்டிலேயே சுவையான பீட்ஸா தயாரிக்கலாம் வாங்க...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்