IPL கிரிக்கெட்: 21 வது லீக்கில் கொல்கத்தா அணி வெற்றி

IPL கிரிக்கெட் பஞ்சாப் கிங்ஸ் எதிரானஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

IPL தொடரின் 21-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் டக் அவுட்டானார். கிறிஸ் ஜோர்டான் 18 பந்தில் 30 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 31 ரன்கள் சேர்த்தார்.

124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ரானா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஷுப்மான் கில் 9 ரன்னில் வெளியேறினார்.அடுத்து வந்த சுனில் நரேன்டக் அவுட்டானார். ராகுல் திரிபாதி 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் மார்கன் சிறப்பாக விளையாடி 47 ரன்னுடன் அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், கொல்கத்தா அணி 16.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 4 வது முறையாக தோல்வியை கண்டுள்ளது.

You'r reading IPL கிரிக்கெட்: 21 வது லீக்கில் கொல்கத்தா அணி வெற்றி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்