இந்தியாவுக்கு விளையாடுவாரா மாட்டாரா?- குழப்பத்தை ஏற்படுத்திய கோலி

கவுண்டி தொடரில் விராட் கோலி விளையாடும்போது இந்தியாவுக்காக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். பெங்களுரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகப் பட்டையைக் கிளப்பி வரும் கோலி, விரைவில் இங்கிலாந்து கிரிக்கெட் லீக் தொடர் ஒன்றிலும் விளையாட உள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே ஜூன் மாதத்தில்தான் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் கோலி கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கவுண்டி தொடர், கோலி ஜூன் மாதம் முழுவதும் எங்களுக்குத்தான் என அறிவித்துள்ளபோது, அதே ’ஜூன் மாதத்தில் வரும் அயர்லாந்து தொடரில் கேப்டன் கோலி இந்தியாவுக்காக எப்படி விளையாடுவார்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இந்தியாவுக்கு விளையாடுவாரா மாட்டாரா?- குழப்பத்தை ஏற்படுத்திய கோலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ’ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்கள் கலிபோர்னியாவில்!’- அமெரிக்க சபை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்