உலகக்கோப்பை கால்பந்து: 2-2 கோல் கணக்கில் ஸ்பெயின் - மொராக்கோ டிரா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பல்வேறு நாடு அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின. இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்து இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடி வந்தனர். இதனால், இதன் முதல் பாதியில் 14வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் காலித் பவுடாய் ஒரு கோல் அடித்தார்.

இதற்கு, ஸ்பெயின் அணியின் இஸ்கோ 19வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால், முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்தன.

பின்னர், ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 81வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸ்ரி ஒரு கோல் அடித்தார். இதனால், மொராக்கோ அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்பெயினின் லாகோ அஸ்பாஸ் கூடுதலாக வழங்கப்பட்ட நிமிடங்களில், 91வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதனால், இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடித்தனர்.

You'r reading உலகக்கோப்பை கால்பந்து: 2-2 கோல் கணக்கில் ஸ்பெயின் - மொராக்கோ டிரா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிகாகோ: சிக்கியது 680 கிலோ கஞ்சா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்