உலக கோப்பை கால்பந்து: இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு முதல் அரையிறுதி போட்டி தொடங்கியது. இதில், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் வெற்றி முனைப்போது தீவிரமாக விளையாடினர். இரு அணிகள் போட முயன்ற கோலை இரு அணிகளின் கோல் கீப்பர்களும் அபாரமாக தடுத்தனர். இதனால், இரண்டு அணிகளும் கோல் போடவில்லை.

இதனால், முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் சமனிலையில் இருந்தன. இரண்டாவது பாதி தொடங்கியதும், ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்தார். இதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனால், இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

You'r reading உலக கோப்பை கால்பந்து: இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உரிமம் இல்லாத மது பார்கள் ஏழு நாளில் மூடப்படும் - தமிழக அரசு உறுதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்