கபில்தேவ் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுகிறார்!

கபில் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய நாள்: அக்டோபர் 17, 1994
கபில் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் நாள்: அக்டோபர் 17, 2018
கபில்தேவ்! இன்று கேட்டாலும் உற்சாகமூட்டும் பெயர்.
கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, உலக கோப்பை வென்றதன் மூலம் மொத்த இந்தியாவும் நேசிக்கும் பெயர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ், மீண்டும் இந்தியாவுக்காக விளையாட இருக்கிறார். 
 
அதே வீரர், அதே நாள் - ஆனால், விளையாட்டு மட்டும் வேறு! தற்போது 59 வயதாகும் கபில், இந்தியாவுக்காக கிரிக்கெட் அல்ல; கோல்ஃப் விளையாட இருக்கிறார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 24 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட இருக்கிறார்.
 
2018 அக்டோபர் மாதம் 17 முதல் 19-ம் தேதி வரை ஜப்பானில் மியாஸகியில் நடைபெற உள்ள ஆசியா பசிபிக் அளவிலான மூத்தோர் கோல்ஃப் போட்டியில் இந்தியா சார்பில் விளையாட ஆறு பேர் கொண்ட அணிக்கு கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் நொய்டாவில் நடந்த தகுதிப்போட்டியில் கபில்தேவ் தேர்வாகியுள்ளார்.
 
"கிரிக்கெட் இல்லையென்றாலும் இன்னொரு விளையாட்டில் பங்கு பெறுவது மகிழ்ச்சிகரமானது. நாட்டுக்காக எந்த விளையாட்டையும் விளையாடுவது பெருமைக்குரியதுதான்," என்று கூறியுள்ளார். 
கலக்க வாங்க கபில்!

You'r reading கபில்தேவ் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுகிறார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருணாநிதி தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்: மு.க.ஸ்டாலின்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்