வெளிநாட்டில் திறமையை காட்டுவதே நிஜ வெற்றி: ராகுல் டிராவிட் அட்வைஸ்!

Rahul Dravid on World Cup 2019

வெளிநாட்டு மண்ணில் நமது வீரர்களின் ஆட்டம் இன்னும் மேம்பட வேண்டும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய மண்ணில் சுற்றுலா வந்த மேற்கிந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. இந்த போட்டியில், கேப்டன் கோலி, ரோகித் சர்மா இருவரின் ஆட்டம் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக இருந்தது. கடைசி போட்டியில் தவான் ஃபார்முக்கு திரும்பியது நல்ல விஷயம். ராகுல், ரிஷப் பண்ட், அம்பத்தி ராயுடு, ஜடேஜா போன்ற வீரர்கள் மேலும் தங்களது முழு திறனையும் வெளி கொணர வேண்டும்.

இந்திய மண்ணில் வெற்றி காண்பது மட்டும் முக்கியமல்ல வெளிநாட்டு மண்ணிலும் நமது வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. நமது அனைத்து வீரர்களும் தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தினால் மட்டுமே நம்மால் உலக கோப்பையை வெல்ல முடியும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. வெளிநாட்டு மண்ணில் நமது வீரர்கள் சாதித்து வரவேண்டும் என டிராவிட் மேலும் வலியுறுத்தினார்.

You'r reading வெளிநாட்டில் திறமையை காட்டுவதே நிஜ வெற்றி: ராகுல் டிராவிட் அட்வைஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மூக்கில் இருந்த ட்யூப்பை கழற்றி எறிந்ததால் மரணத்தை தழுவிய காடுவெட்டி குரு.. பகீர் தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்