முதல்வரை மாற்ற டெல்லி மும்முரம்- எடப்பாடி பழனிசாமிக்கு குழிபறிக்கும் கொங்கு அமைச்சர்... முதல்வர் கனவில் களைகட்டும் நள்ளிரவு பூஜைகள்!

Political gossip on Ruling Party

கொடநாடு விவகாரம் உள்பட பல வகைகளில் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் போனால், ஒவ்வொரு அஸ்திரங்களாக வீசுவார்கள் என்பதால் மௌனம் காத்து வருகிறார் எடப்பாடியார்.

அமமுகவுடன் இணைப்பு, கூட்டணி என எதைப் பற்றிப் பேசினாலும் எதிர்முனையில் பதில் இல்லாததால், முதல்வரை மாற்றும் அளவுக்கு டெல்லியில் சில விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி மீது தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதால், அடுத்த நிலையில் இருப்பவர்களில் ஒருவர் முதல்வர் ஆகலாம் எனக் கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதை உணர்ந்து டெல்லியில் தன்னுடைய சோர்ஸுகளோடு பேசத் தொடங்கியிருக்கிறார் கொங்கு புள்ளி ஒருவர். ஏற்கெனவே, பூஜை, புனஸ்காரம், நாடி ஜோதிடம், கிளி ஜோதிடம், பணிக்கர் ஜோதிடம் என முழு மந்திரவாதியாக வலம் வரும் அந்தப் புள்ளிக்கு கோட்டை நாற்காலி கனவும் வந்துவிட்டதாம். கொங்கு தேசத்தில் பூட்டிக் கிடக்கும் கோவில்களில் எல்லாம் நள்ளிரவு பூஜை நடத்தி வருகிறார்.

அரசுப் பதவியில் அமர்வதற்கான பழங்கால மன்னர்கள் நடத்திய அசுவமேத யாகத்தையும் அவர் விடவில்லையாம். அவரது உதவியாளர்களும் மந்திரித்துவிடப்பட்ட கோழி போலவே அவரைச் சுற்றி வருகிறார்களாம். டெல்லி ஆசிர்வாதத்தில் ஒருநாளாவது அந்தப் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் எனத் தவியாய்த் தவிக்கிறாராம்.

 

You'r reading முதல்வரை மாற்ற டெல்லி மும்முரம்- எடப்பாடி பழனிசாமிக்கு குழிபறிக்கும் கொங்கு அமைச்சர்... முதல்வர் கனவில் களைகட்டும் நள்ளிரவு பூஜைகள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே.. ஜன.24-ல் இசை வெளியீடு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்