ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ்.ஆஜராகும் தேதி மாற்றம்!

Arumugasamy commission, OPS Representing to Change date!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராவதற்குப் பதில் வரும் 29-ந் தேதி ஆஜராகிறார்.

ஆணையத்தின் முன்பு நாளை 23-ந் தேதி ஓபிஎஸ் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஆஜராக அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வரும் 29-ந் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.

அவரிடம் 8 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓ.பி.எஸ்.குறித்து பல்வேறு தகவல்களைக் கூறியிருந்தார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழு தகவல்களும் ஓ பிஎஸ்சுக்கு தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்த நிலையில் ஓபிஎஸ் கால அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பியுமான தம்பித்துரை விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

You'r reading ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ்.ஆஜராகும் தேதி மாற்றம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாமி கும்பிட, யாகம் நடத்த உன்னுடைய அப்பன் வீட்டு கோட்டை இல்லை.... ஓபிஎஸ் மீது ஸ்டாலின் பாய்ச்சல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்