என் அப்பாவை கொலை செய்துவிட்டார்கள்... புதிய வன்னியர் சங்கம் உருவாகும்... அனல் கக்கும் சின்னகாடுவெட்டியார் கனலரசன்

Kaduvetti Guru son slams Dr Ramadoss

மருத்துவமனையில் என் தந்தையை கொலை செய்துவிட்டனர்; விரைவில் புதிய வன்னியர் சங்கம் உருவாகும் என மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குருவின் பிறந்த நாள் வன்னியர் ஜெயந்தியாக நேற்று கடைபிடிக்கப்பட்டது. காடுவெட்டி கிராமத்தில் குருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனலரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என் அப்பா இறந்தது முதல் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. என் அப்பாவின் பிறந்த நாளை வன்னியர் ஜெயந்தி விழாவாக நடத்த இருவரும் முட்டுக்கட்டை போட்டனர்.

மருத்துவமனையில் வைத்தே என் அப்பாவை கொலை செய்துவிட்டனர். எங்கள் சார்பாக விரைவில் வன்னியர் சங்கம் ஒன்று புதியதாக உருவாக்கப்படும்.

வன்னியர் சமூகத்தின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு கனலரசன் கூறினார்.

You'r reading என் அப்பாவை கொலை செய்துவிட்டார்கள்... புதிய வன்னியர் சங்கம் உருவாகும்... அனல் கக்கும் சின்னகாடுவெட்டியார் கனலரசன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதலியார் லாபியில் ’மாப்பிள்ளை’... பாமகவுக்காக வரிந்து கட்டும் சீனியர்கள்...திமுகவில் உக்கிர யுத்தம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்