இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு- பாஜகவின் கல்யாண்ராமனை ஏர்போர்ட்டில் மடக்கி தூக்கியது போலீஸ்

BJP man held for hate post on social media

இஸ்லாமியர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்டு வந்த பாஜக பிரமுகர் கல்யாண் ராமனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் பக்கத்தில் சமூக அமைதிக்கு வேட்டு வைக்கும் வகையில் எச். ராஜா பாணியில் கருத்துகளை பதிவிட்டு வருபவர் கல்யாண்ராமன். டிவி விவாதங்களிலும் வெறுப்பு அரசியலை தீவிரமாக முன்வைக்கக் கூடியவர்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய பதிவுக்காக சென்னை போலீசார் கல்யாண்ராமனை கைது செய்திருந்தனர். தற்போது அவர் மீது மீண்டும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து சென்னை திரும்பிய கல்யாண்ராமனை விமான நிலையத்தில் மடக்கி போலீசார் கைது செய்தனர்.

 

You'r reading இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு- பாஜகவின் கல்யாண்ராமனை ஏர்போர்ட்டில் மடக்கி தூக்கியது போலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வனத்துறையினரின் தொடர் விரட்டல் தாங்க முடியல .....மயங்கி விழுந்தான் 'சின்னத்தம்பி யானை'!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்