28 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னைக்கு கெடைக்குமா அந்த நிம்மதி?... ட்விட்டரில் ஏங்கும் அற்புதம் அம்மாள்

Arputham Ammal tweets on Perarivalan release

ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றாவது முடிவெடுப்பாரா? என அவரது தாயார் அற்புதம் அம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அற்புதம் அம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

பாசமும் அன்புந்தான் எங்க குடும்ப சொத்து. 28 ஆண்டு போராட்டத்தில இழந்த மகிழ்ச்சி தற்காலிகமா கிடைச்ச நேரம் இது.

நிரந்தர நிம்மதி ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில நிக்குது. இன்னைக்கு கெடைக்குமா அந்த நிம்மதி?

இவ்வாறு அற்புதம் அம்மாள் பதிவிட்டுள்ளார்.

You'r reading 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னைக்கு கெடைக்குமா அந்த நிம்மதி?... ட்விட்டரில் ஏங்கும் அற்புதம் அம்மாள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜயகாந்துடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்