பேருந்து கட்டணத்தை எதிர்த்து விஜயகாந்த் பேருந்து பயணம்

சென்னை: தமிழக அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாநகரப் பேருந்தில் பயணம் செய்தார்.

தமிழக அரசு கடந்த 19ம் தேதி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணங்களை திடீரென உயர்த்தி அறிவித்தது. மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3ல் இருந்து ரூ.6க்கு உயர்த்தப்பட்டது. இதுபோல், வெளியூர் பேருந்துகள், விரைவு பேருந்துகள், குளிர் சாதன பேருந்துகள் என அனைத்து பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி, பள்ளி மாணவர்கள் சாலை மறியில் கல்லூரி புறக்கணிப்பு என பல்வேறு போராட்டங்களில் இறங்கினர்.
மேலும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், பேருந்து கட்டண உயர்வுக்கு தேமுதிக சார்பில் நேற்று பல்லாவரத்தில் போராட்டம் நடத்தப்பட்ட. இதில் கலந்துக் கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாநகரப் பேருந்தில் பயணம் செய்தார்.

ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்துக்குப் பேருந்தில் பயணம் செய்த விஜயகாந்த் நடத்துடனரிடம் ரூ.500 கொடுத்து பேருந்தில் பயணித்த தொண்டர்களுக்கும் சேர்த்து அவர் டிக்கெட் எடுத்தார்.

பேருந்தில் பயணித்து தனது எதிர்ப்பை தெரிவித்த விஜயகாந்தின் வித்தியாசமான செயல் பேருந்தில் இருந்த பயணிகளை வியக்க வைத்தது.

You'r reading பேருந்து கட்டணத்தை எதிர்த்து விஜயகாந்த் பேருந்து பயணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்