ஓட்டுக்கு 4 ஆயிரம் அல்ல 40 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுகவால் ஜெயிக்க முடியாது தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

ADMK never won a single seat even it will give 40 thousand rupees to a vote

சூலூர். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவால் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

அதிமுக அரசு பாஜகவிடம் அடிபணிந்து பண பலத்தால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற கனவு காண்கிறது. ஆனால், அவர்கள் பக்கம் மக்கள் பலம் கொஞ்சம் கூட இல்லை. 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறிய அமமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக அரசு ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் அல்ல 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், வெற்றி பெறாது எனக் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை மக்கள் விரைவில் தூக்கி வீச உள்ளனர் எனக் கூறிய தங்க தமிழ்ச்செல்வன், திமுக தொண்டர்களே ஸ்டாலினை தலைவராக ஏற்காத போது அவர் எங்களுக்கான போட்டியாக ஒருபோதும் வர மாட்டார் என்றும் கூறினார்.

பெண் மார்புக்குள் இப்படியொரு அதிசயமா? உலகளவில் வைரலாகும் புகைப்படம்!

You'r reading ஓட்டுக்கு 4 ஆயிரம் அல்ல 40 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுகவால் ஜெயிக்க முடியாது தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாரணாசியில் குவிந்த பாஜக கூட்டணி தலைவர்கள் - அமித் ஷாவுடன் ஓபிஎஸ், வேலுமணி, தம்பித்துரை ஆலோசனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்