மோடி சொன்னதாலேயே இரு அணிகளையும் இணைத்தேன் - ஒப்புக்கொண்ட ஓ.பி.எஸ்.

தற்போதுள்ள சூழலில் கட்சியை காப்பாற்ற நீங்கள் இணைய வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தற்போதுள்ள சூழலில் கட்சியை காப்பாற்ற நீங்கள் இணைய வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர்செல்வம், “பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாலேயே அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன். அதிமுக அணிகள் இணைப்புக்கு முன் நான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். தற்போதுள்ள சூழலில் கட்சியை காப்பாற்ற நீங்கள் இணைய வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

அணிகள் இணைப்பில் எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன். அதற்கு அவர் நீங்கள் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றார். என் உடன் இருந்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இதே வேண்டுகோளையே வைத்தனர். அதனால் தான் நான் தற்போது அமைச்சரவையில் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading மோடி சொன்னதாலேயே இரு அணிகளையும் இணைத்தேன் - ஒப்புக்கொண்ட ஓ.பி.எஸ். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காவிரி நதிநீர் தீர்ப்புக்கு ஆதரவாக விஜயகாந்த் கருத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்