சென்னையில் கொரோனா பரவல் குறையவில்லை.. இது வரை 7672 பேர் பாதிப்பு..

corona cases in Tamilnadu rises to 12,448.

தமிழகத்தில் இது வரை 12,448 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில் 4895 பேர் குணமடைந்துள்ளனர். 84 பேர் பலியாகியுள்ளனர்.தமிழக அரசு நேற்று(மே19) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 688 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மகாராஷ்டிராவிலிருந்து வந்த 49 பேரும் அடங்குவர். தற்போது மாநிலம் முழுவதும் 12,448 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 489 பேரையும் சேர்த்து மொத்தம் 4895 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 3 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்துப் பலி 84 ஆக உயர்ந்தது. நேற்று 9844 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 3 லட்சத்து 32,352 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.


சென்னையில்தான் வழக்கம் போல் நேற்றும் புதிதாக 552 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ளது. இது தவிரச் செங்கல்பட்டில் 22 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 5, திருவள்ளூர் 8 மற்ற மாவட்டங்களில் ஓரிருவருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இது வரை, அரியலூரில் மொத்தம் 355 பேருக்கும், செங்கல்பட்டு 560, கோவை 146, கடலூர் 430, காஞ்சிபுரம் 208, மதுரை 169, பெரம்பலூரில் 139 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை உள்படப் பல மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்ததால், பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் மூலமும், அடுத்ததாக கோயம்பேடு மார்க்கெட் மூலமும் கொரோனா பரவியிருந்தது. தற்போது அவை கட்டுப்பட்டு விட்டாலும், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவி வருகிறது.

You'r reading சென்னையில் கொரோனா பரவல் குறையவில்லை.. இது வரை 7672 பேர் பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 10ம் வகுப்பு பொதுத் தேர்வு.. ஜூன் 15க்கு தள்ளி வைப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்