பணிச்சுமையால் தற்கொலை: வீழும் தமிழகக் காவல்துறை!

காவல்துறையினர் பணிச்சுமையால் தற்கொலை செய்துகொள்ளுவது தமிழகக் காவல்துறையில் அதிகரித்துக் காணப்படுகிறது.

தமிழகக் காவல்துறையில் பணிச்சுமையால் தற்கொலை செய்தும் கொள்ளும் போலீஸாரின் எண்ணிகை அதிகரித்து வருவதாகவே சமீபத்தில் நடந்த சம்பவங்களும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இந்தியக் காவல்துறை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவு சமீபத்தில் வெளியானது. இதில், கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் தமிழகக் காவல்துறையில் 166 போலீஸார் தற்கொலை செய்துள்ளனர். இந்தியாவிலேயே இது அதிகப்பட்சமாகும்.

இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு 162 போலீஸாரும், கேரளாவில் 61 போலீஸாரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சொந்தப் பிரச்னைகள், மன ரீதியிலான அழுத்தம், பணிச்சுமை ஆகியவற்றாலே காவல்துறையில் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

You'r reading பணிச்சுமையால் தற்கொலை: வீழும் தமிழகக் காவல்துறை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாளை இமயமலை புறப்படுகிறார் சூப்பர்ஸ்டார்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்