கோவிலுக்குள் இப்படி செய்ய வேண்டுமா? அய்யாக்கண்ணுவை கைது செய் - எச்.ராஜா

பாஜக மகளிர் நிர்வாகியை கெட்ட வார்த்தை பேசி, அடிக்கப் போன அய்யக்கண்ணுவை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

பாஜக மகளிர் நிர்வாகியை கெட்ட வார்த்தை பேசி, அடிக்கப் போன அய்யக்கண்ணுவை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வலியுறுத்தி திருச்செந்தூர் முருகன் கோவியில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தனது ஆதரவாளர்களுடன் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி வந்தார்.

அப்போது, அங்கு வந்த பாஜக பெண் நிர்வாரி ஒருவர் கோவிலில் துண்டு பிரசுரங்கள் கொடுக்கக்கூடாது என்றும், அய்யாக்கண்ணு ஒரு ஃபிராடு என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்நேரத்தில், திடீரென அந்த பெண் நிர்வாகி அய்யாக்கண்ணுவின் கண்ணத்தில் அறைந்தார். மேலும், அவர் அணிந்திருந்த செருப்பை எடுத்து காட்டி அய்யாக்கண்ணுவை மிரட்டி உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “மகளிர் தினமான நேற்றைய தினத்தில் கோவிலில் வைத்து பெண்ணை தாக்கமுயன்ற அய்யாக்கண்ணுவை கைது செய்ய வேண்டும். கோவிலுக்குள் சென்று நேட்டீஸ் கொடுத்திருக்கிறார்.

இவர் மசூதி, சர்ச்க்கு எல்லாம் போய் நோட்டீஸ் கொடுக்க முடியுமா? இந்துக்களின் வழிப்பாட்டு தளத்தை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று செய்கிறார். கோவிலுக்குள் சென்றால் தேவாரம், திருவாசகம் கொடுக்கட்டும்.

அங்கு சென்று இதுபோல் நோட்டீஸ் கொடுப்பது மட்டுமல்லாமல், நெல்லையம்மாள் என்கிற பாஜக மகளிர் நிர்வாகியை கெட்ட வார்த்தை பேசி அடிக்கப் போவது போன்ற வீடியோ நம் எல்லாருக்கும் வந்துள்ளது. அவர் தாக்க போறார். கெட்டவார்த்தை பேசுகிறார். அந்த மாதிரியான மிக கொச்சையான நபரை இதுவரை திருச்செந்தூர் போலீசார் கைது செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

You'r reading கோவிலுக்குள் இப்படி செய்ய வேண்டுமா? அய்யாக்கண்ணுவை கைது செய் - எச்.ராஜா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொது தேர்வு எழுத வந்த மாணவரின் கை விரல்களை வெட்டிய சக மாணவர்களால் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்